• முகப்பு
  • tamilnadu
  • தூத்துக் குடியில்வீடு இடிந்துவிழுந்து ஒருவர்பலி. வீட்டுக்குவந்த 15 நாளில் நிகழ்ந்தசோகம்.

தூத்துக் குடியில்வீடு இடிந்துவிழுந்து ஒருவர்பலி. வீட்டுக்குவந்த 15 நாளில் நிகழ்ந்தசோகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தூத்துக் குடியில்வீடு இடிந்துவிழுந்து ஒருவர்பலி. வீட்டுக்குவந்த 15 நாளில் நிகழ்ந்தசோகம். தூத்துக் குடி டூவிபுரம் 3 ஆவது தெருவில் வசிந்தவந்தவர் சுரேஷ் வயது (40) த / பெ கோவிந்த சாமி. பெயிண்டரான இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்தவருடம் மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டுகுழந்தைகளையும் நெல்லையில் உள்ளமாமியார் வீட்டில்விட்டு தூத்துக் குடியில் பெயிண்டர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்றுமாலை சுமார் 5.30 மணியளவில் தனது மகனைக் காண சுரேஷின்தாயார்  டூவிபுரம் 3 ஆவது தெருவில் 15 நாட்களுக்குமுன்பு குடியேறியவீட்டிற்க்கு வந்துள்ளார். வீட்டின் கதவைதிறந்த அவர் , வீடு இடிந்து விழுந்துதனது மகன்பிணமாக கிடப்பதைக்கண்டு அலறியுள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில் விரைந்துவந்த மத்தியபாகம் போலீசார், தீயனைப்புத் துறையினருக்கு தகவல்தெரிவித்தனர். அங்குவந்த தீயணைப்புதுறையினர் இடிபாடுகளை அகற்றி சுரேஷைமீட்டு அரசுமருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைபரிசோதித்த மருத்துவர்கள் அவர்இறந்து சில மணிநேரம் ஆகிவிட்டதாக தெரிவித்தனர். வீடு இடிந்துவிழுந்தும் அக்கம்பக்கம் நெருக்கமாகவீடு இல்லாதகாரணத்தால், நடந்தசம்பவம் அவருடைய தாயார்வந்து பார்க்கும்வரை தெரியாமலே இருந்து உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அண்ணா நகரில் இதேபோல பழையவீடு ஒன்று இடிந்துவிழுந்ததில், நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணும், அவரதுதாயாரும் பரிதாபமாக உயிரிழந்தசோகம் ஆறுவதற்குள் அதேபோல மற்றொருசம்பவம் நடந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended