கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்...!!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் கிராமத்தில் புகழ் பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி இன்று நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள் மேல்நரியப்பனூர் கிராமத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமல் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் நீண்ட நேரமாக பேரூந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி . சுரேஷ்