இன்றைய தலைப்புச் செய்திகள் 24.4.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாகை : அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் : நத்தம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், 510 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி சொறிப்பாறைப்பட்டியில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், திண்டுக்கல், திருச்சி, பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 510 காளைகள் களமிறங்கின. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். கோவை : சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ஓட்டுநர் மற்றும் கிளீனர். .விரைந்து வந்து தீயை அணைத்தனர் தீயணைப்பு வீரர்கள். திண்டுக்கல் : சின்னாளபட்டி, டி.புதுப்பட்டி அருகே விருச்சிப்பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் : மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் நடைபெற்றும் வரும் புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் திருவிழாவில், மூன்றாம் நாள் இன்று அதிகாலை உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சியும், புனிதர்கள் இரத பவனியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். தேனி மாவட்டம் : கம்பம் நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி நிர்வாகத்தில்தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி மக்கள் கிராமசபை கூட்டத்தில் சரமாரியாக புகார் செய்தனர். தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன் பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நாகை : அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை : பொன்னமராவதியில் மூடிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் எதிர்பார்ப்பு. திருச்சி மாவட்டம் : மண்ணச்சநல்லூர் அருகே சிங்குளத்தில் குளித்த அரசு பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7-ம் வகுப்பு படிக்கும் சத்தியா மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் தனுஷ்கா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இச்சம்வம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் : மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் ஏகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பைத்தூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் : பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறையை கழிக்க கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சென்னை : மதுரவாயலில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கிஷோர்குமார், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் 91 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,kanyakumari news live,madurai news tamil,nagapatinam news,dindgul news in tamil today,chennai news today in tamil

VIDEOS

RELATED NEWS

Recommended