இன்றைய முக்கிய செய்திகள் 4.6.2022
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வேலூர் :
கோட்டையில் சைக்கிள் தினத்தையொட்டி சைக்கிள் பேரணி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை :
அரண்மனை சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டையில் சைக்கிள் தினத்தையொட்டி ஏராமானோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
தஞ்சை :
பிரகதீஸ்வரர் கோவில் மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.
தூத்துக்குடி :
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தூய்மையான தூத்துக்குடி என்ற என்ற தலைப்பில் சைக்கிள் விழிப்புணர்வு வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
திருச்சி :
லால்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விசாரணையை அடுத்து முத்து (50) என்ற விவசாயியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு :
மாமல்லபுரத்தில் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் நேரு யுகேந்திரா சார்பில் உலக சைக்கிள் தின பேரணி நடைபெற்றது.
சென்னை :
மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் திருமணமான இளம்தம்பதி சக்திவேல்-ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் கூறியதால் மனஉளைச்சலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தூத்துக்குடி :
பகுதியில் புதிய வீட்டிற்காக கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டபோது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். 15 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரில் மாரிமுத்து(22) என்பவர் மண்சரிவில் சிக்கி இறந்துள்ளார்.