இன்றைய முக்கிய செய்திகள் 20.6.2022
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஈரோடு :
அந்தியூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது.
45 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் சிவசக்தி காவல்துறையினரால் கைது.
__________________________
திருச்சி :
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பேருந்தில் பயணித்தவர்கள் நல் வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தகவல்
__________________________
சிவகங்கை :
மாங்குளத்தில் முன்னாள் ஊராட்சி செயலாளர் உட்பட 3 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
பிரதமர்வீடு கட்டும்திட்டத்தில் போலி ஆவணம் மூலம் நிதி ஒதுக்கீடுசெய்ய ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டில் நடவடிக்கை.
__________________________
திருப்பத்தூர் :
நாட்றம்பள்ளி பகுதியில் லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு நாகராஜ் மதன்குமார் 4 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நான்கு பேர் அனுமதி
__________________________
மதுரை :
மல்லிகைப் பூ விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ₨1,600க்கு விற்பனை. பொதுமக்கள் அதிர்ச்சி
__________________________
தேனி :
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சி
__________________________
ராணிப்பேட்டை :
அரக்கோணம் பகுதியில் விவசாயி கிணற்றில் குளிக்கச் சென்ற போது இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
__________________________
கன்னியாகுமரி :
நாகர்கோவில்
டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4-ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து போலி முகவரியில் 2 கிலோ கஞ்சா அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
__________________________
நீலகிரி :
உதகை மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. உதகை, குன்னுர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பிற்பகலில் மழைபெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாபயணிகள் கொட்டும் மழையிலும் நனைந்த வாறு பார்வையிட்டு ரசித்தனர்.
__________________________
திருப்பூர் :
பல்லடம் அருகே கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டு நர் உயிரிழந்தார்.
மேலும் 2 வயது குழந்தை உள்பட 7பேர் படுகாயமடைந்தனர்...
__________________________
புதுச்சேரி :
இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளை கொண்டுசென்ற ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நடத்திய வாகன தணிக்கை போது பிரபல ரவுடி ஐயப்பன், ரகு ஆகியோர் சிக்கியுள்ளனர். ரவுடிகளிடம்ருந்து 2 வெடிகுண்டுகள், அரிவாள் போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.
__________________________
வேலூர் :
காட்பாடி காந்திநகர் பகுதியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன் சடலமாக மீட்பு. கொலையா? தற்கொலையா? போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
__________________________
தேனி :
பெரியகுளத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது.