இன்றைய முக்கிய செய்திகள் 12.6.2022
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் :
பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஹரஹர மகாதேவா, ஓம் நமசிவாயம், திருச்சிற்றம்பலம்’ என விண்ணதிர முழங்கினர்.
கிருஷ்ணகிரி :
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஒசூர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விருதுநகர் :
மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக தனியார் நர்சிங் கல்லூரி உரிமையாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யபட்டார். 6 மாதத்திற்கு முன் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்.
கோவை :
மேட்டுப்பாளையம்
நகரப்பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருவதுடன் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகிறார்கள் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி :
ஏடிஎம்-ல் கிழிந்த, கரையான் அரித்த ரூ.500 நோட்டுகள் வந்த நிலையில் புதிய நோட்டுகளை உரிமையாளரிடம் வழங்கியது தனியார் வங்கி
சென்னை :
கால் டாக்சி ஓட்டுநர் ரவி கொலை வழக்கில் கவிதா என்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரம். வழக்கில் தொடர்புடைய காவலர் செந்திலை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
கைது செய்யப்பட்ட கவிதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
சென்னை :
போலி பட்டியல்கள் தயாரித்து உள்ளீட்டு வரியை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த உதவிய சென்னை போலி வணிகர் கைது செய்யப்பட்டார். வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி வணிகர் மதுரவாசல் சீனிவாசன் வரதராஜன் சிக்கினார். அவருக்கு சொந்தமான ஸ்ரீசாய் பாலாஜி இம்பெக்ஸ் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் :
சத்திரக்குடியில் டிராக்டர் மோதியதில் 5 வயது சிறுவன் ஹியாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பின்பக்கமாக வந்த டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார்.
திருவாரூர் :
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள மரைக்காகோரையாறு, முள்ளியாறு, வளவன்வடிகால் ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் :
வடமதுரை அருகே சித்தூர் குளத்தில் 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெரும்பாறையை சேர்ந்த மாரிமுத்து(வயது 36) என்பவர் உடம்பில் காயங்களுடன் கொலை வடமதுரை போலீசார் விசாரணை.
தூத்துக்குடி :
திருசெந்தூரில் இளம்பெண்ணை கேலி செய்ததால் இளைஞரை வெட்டிக் கொன்ற போலீசை கைது செய்தனர். எலக்ட்ரீசியன் கண்ணன், ராஜ் என்பவரின் மகள்களை அடிக்கடி கேலி செய்து வந்ததாக புகார் எழுந்தது.