இன்றைய முக்கிய செய்திகள் 10.6.2022
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மதுரை :
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக மதுரையில் “உலக லெவல் கிராசிங்” விழிப்புணர்வு தினம் அனுசரிப்பு.
லெவல் கிராசிங்கை மீறினால் என்னென்ன தண்டனை கிடைக்கும் என்பது பற்றி விளக்கம் தரப்பட்டது.
திண்டுக்கல் :
பழனி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. அப்போது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் நகராட்சி ஊழியர்களை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு :
நயன்தாரா திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் அருகே போக்குவரத்து நெரிசலால் அடுத்தடுத்து 3 விபத்து. யாருக்கும் காயமில்லை. வாகனம் மட்டுமே சேதம்.
மயிலாடுதுறை :
சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்பு.
தேனி :
பெரியகுளம் அருகே பாப்பன்பட்டி கண்மாயில் குளித்த 2 சிறுவர்கள் உள்பட 3பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கண்மாயில் குளித்த சிறுவர்கள் சபரிவாசன், மணிமாறன் மற்றும் பன்னீர் என்பவர் நீரில் மூழ்கி பலியாகினர்.
திருவண்ணாமலை :
செய்யாறு பகுதிகளில் அடுத்தடுத்து மாணவிகள், பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே தனிப்படை அமைத்து மாயமான பெண்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடலூர் :
ஆபத்தாரணபுரத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீரென மாயமானதால் திருமணம் நிறுத்தம். மணமகள் வீட்டார் சோகம்.
விழுப்புரம் :
திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 5 பெண்களிடம் தாலிச்சரடு நகைகள் 20 பவுன் திருட்டு.
காஞ்சிபுரம் :
வேகவதி ஆற்றின் கரையில் சுமார் 50 ஆண்டு காலமாக குடியிருந்து வந்தவர்களை காலி செய்ய உத்தரவு. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம் :
பள்ளிக்கல்வித் துறை சார்பாக வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா துவக்கி வைத்தனர்.