Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருப்பூர் : மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது. மதுரை : மாணவிகள் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் மோதல் நிகழ்ந்ததாக விசாரணையில் தகவல். பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு நடத்திய விசாரணையில் தகவல் வெளியானது. மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டம். தூத்துக்குடி : அனல்மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அனல்மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அனல்மின் நிலையத்தில் 10,000 தன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி : அல்லிமால் தெருவை சேர்ந்த அனுஷ்காவிடம் ஆன்லைனில் ரூ.5.50 லட்சம் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் பொம்மை ஆர்டர் செய்த நிலையில், வங்கி கணக்கில் இருந்து ரூ.5.50 லட்சம் மோசடி என தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை : அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை: அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆறுதல். சிவகங்கை : கீழடி 8ம்‌ கட்ட அகழாய்வில் சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு . தூத்துக்குடி : கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது. அரிவாளால் தாக்கியதில் மாணவன் காயம். ஈரோடு : ஆவின் பால் பண்ணையில் பால் குளிரூட்டப்படும் முறை மற்றும் பவுடர், தயிர், மோர், கோவா, நெய், வெண்ணை, பாதாம் பவுடர், குலோப் ஜாமுன் மிக்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு முறைகளை, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இரு கர்ப்பிணி பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம். நீலகிரி : கோத்தகிரி குஞ்சப்பனையில் காரை தாக்கிய காட்டுயானை: வனத்துறை எச்சரிக்கை. திருச்சி: ஸ்ரீரங்கத்தில் முதியவர் நாச்சிமுத்துவிடம் அடையாளம் தெரியாத நபர்களால் ரூ.2.5 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. வங்கியில் இருந்து நாச்சிமுத்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோது பிரித்த நபர்களை போலீஸ் தேடுகிறது. திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலுதவி மருத்துவ மையத்தினை, மாநில அமைச்சர் திரு கே என் நேரு திறந்து வைத்தார். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,madurai latest news,Ariyalur todays news,Krishnagiri latest news tamil,dindigul news today,tuticorin news tamil,Ramnathapuram todays news live,Kanchipuram news today,Dharmapuri news today tamil,pondichery flash news,Coimbatore news today tamil,

Tags:

Comments & Conversations - 0