- முகப்பு
- சிவத்தோடு ஐக்கியமாக வேண்டும் ! ஓர் அன்பர் கேள்வி, கேள்வியும் பதிலுமானவன் திருவருளால் பதிவு
சிவத்தோடு ஐக்கியமாக வேண்டும் ! ஓர் அன்பர் கேள்வி, கேள்வியும் பதிலுமானவன் திருவருளால் பதிவு
Kanishka
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிவத்தோடு தான் எல்லாம் ஐக்கியமாகி உள்ளது என்ற மெய்யை முதலில் உணரவேண்டும் !!
கருதுவது, கருதவைப்பது, நினைப்பது, நினைக்கவைப்பது, இருப்பது, இருக்கவைப்பது, போவது, போகவைப்பது, அனுபவிப்பது, அனுபவிக்கவைப்பது, இது போல நாம் நாமாக இருக்க, எதுவும் எதுவாக இருக்க, சிவத்தால் அன்றி வேறு எதுவாலும் இல்லை !!
யாவையும் உள்ளடக்கி எதையும் எதுவுமாக காட்டிகொண்டு இருப்பது சிவமே !!
என் முயற்சி என்று ஏதுமில்லாது சுவாசிக்கும் அனைத்தும், சுவசிக்கவைப்பதாலேயே சுவசித்துகொண்டு இருக்கிறது, அது சுவாசிக்கவேண்டும் என்று நினைப்பது கூட இல்லை, தன்னையே மறந்து இருந்தாலும், உறங்கினாலும், அதற்காகன சுவாசம் நடைபெற்றுக்கொண்டே இருப்பதாலேயே அது அதுவாக இருக்கிறது !!
இதுபோல எண்ணற்ற நிகழ்வுகள் நாம் அறிந்தும், அறியாதும், நம்மையே கொண்டு நடைபெறுவதால் தான் நாம் நாமாகவே இருக்கிறோம் !!
அப்படி நம்மோடு ஐக்கியமான ஒன்றே நம்மை அறிந்தும் அறியாதும் இயக்கிக்கொண்டே இருக்கிறது !!
நம்மோடு மட்டும் அல்லது எதுவோடவும் அதுவே ஐக்கியமாகி அதன் உள்ளிருந்தும், வெளியே இருந்தும் இயக்குவதாலே எதுவும் !!
அதில் நாம் கடவுள் இருக்கு, கடவுள் இல்லை, நான்தான் கடவுள், அதுவே கடவுள், அப்படிதான் கடவுள், கடவுளை நம்புறேன், கடவுள் மீது நம்பிக்கை இல்லை, என்று எதை சொல்லி, எதை செய்து, எப்படி வாழ்ந்தாலும், நீ நீயாக இருப்பதாலே மேல்கூறிய அனைத்தும் சாத்தியமாகிறது,
அப்போது நான் நானாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித எண்ணத்தோடு, ஒவ்வொரு நொடிக்கும் சூழலுக்கு ஏற்ற மாற்றம், என்று எல்லாம் நம்மையும் அறியாது நம்மோடு ஐக்கியமானவனால் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது !!
அப்போது சிவம் என்ற நிதர்சனம் பிரபஞ்சத்தின் பேராற்றலாய் உன்னோடு சேர்த்து இந்த பிரபஞ்சத்தையே அதனோடும், அதனுள்ளும் ஐக்கிய படுத்தி இருப்பதாலேயே எல்லாம் .....
இப்போது சொல்லுங்கள் ??
சிவத்தோடு ஐக்கியமாக வேண்டுமா ??
ஐக்கியமான சிவத்தை உணர்ந்தாலே போதும், நான் இதுக்காக இருக்கிறன், அதற்காக வாழ்கிறேன், அது எனக்கு வழிகாட்டியது, என்ற கருதலை கடந்து ??!!
சிவமின்றி ஏதுமில்லை, என்னோடும் எதுவோடும் ஐக்கியமாகிய சிவத்தையே அனுபவித்து வாழ்கிறேன் என்ற மெய்யை மெய்யாக உணர்ந்து, சிவமே சிவமே என்று வாழ்ந்தால் போதுமே !!
மெய்யை உணர்ந்து ஐக்கியமாக வேண்டியது நீ தான், சிவம் உன்னோடு என்றும் எப்போதும் எல்லா பிறவியிலும் ஐக்கியமாகி தான் உள்ளது !!
நான் என்பது தனி !! இறைவன் என்பது தனி !! என்ற உன் விருப்பமே இத்தனை பிறவியும், இந்த பிறவியும் !!
சிவம் என்பதை உருவம் கடந்து !!
பிரித்து பார்ப்பது கடந்து !!
சிவத்திடம் இதையெல்லாம் மறைத்து வாழ்கிறோம் என்ற மடமையும் கடந்து !!
எதுவுமான சிவத்தை அதுதான், அப்படித்தான், என்பதையும் கடந்து !!
எதிலும் எப்போதும் என்றும் கடக்கமுடியாத நிதர்சனமான சிவத்துலே தான் நானும் இருக்கிறேன் என்ற மெய்யுனர்த்து வாழ்ந்தால் போதும் !!
சிவத்துடன் ஐக்கியப்பட்டு உள்ளதை உணர்வாய் ஐக்கியமும் ஆவாய் !!
தெரியாதவன் வழியே தெரிவிப்பவன் திருவருளால்
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே