TNPSC மாற்று திறனாளிகளுக்கான சலுகைகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

TNPSC., குரூப் - 3, 4, 7 பி, 8 போன்ற ஒரே நிலைகொண்ட தேர்வுகளில், தமிழ்மொழித்தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வாக நடத்தப் படுகிறது. இந்த தேர்வுகளில், பல்கலைகளில் ஆங்கில மொழிப் பாடம் மட்டும் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்மொழித் தாள் எழுதுவதில் இருந்துவிலக்கு அளிக்கப் படுகிறது. அதற்கு பதில், ரேங்கிங் மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத்தேர்வு, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப் படும். இத்தேர்வுகளில் மொழி பெயர்ப்புப்பகுதி இடம்பெறாது. கட்டாய தமிழ் மொழித்தாளில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, TNPSC., தேர்வு மட்டுமின்றி, மாநிலத்தின் மற்றதேர்வு முகமைகளால் நடத்தப் படும், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும். இவ்விலக்கு 40 சதவீதத்திற்கும் குறைவானகுறைபாடுகளைக்கொண்ட, மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். விலக்குபெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், உரிய மாற்றுத் திறனாளி சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உதவி தொகையை ரொக்கமாக தர உத்தரவு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ், பட்டப்படிப்பு, டிப்ளமா படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்; மற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப் படுகிறது. இதில், 50 சதவீதத்தொகை ரொக்கமாகவும், மீத முள்ள தொகை தேசியசேமிப்பு பத்திரமாகவும் வழங்கப் பட்டு வந்தது. இனிமேல் முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படுமென, முதல்வர் அறிவித்தார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended