Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

வெற்றிலைப் பெட்டி மாத்திரைப் பெட்டியாக மாறி போனது ஏன்? பற்கள்வெண்மையாக இருக்கவேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை பற்பசைகம்பெனி கடுமையாக விளம்பரம்செய்தது. பற்கள்வெள்ளையாக இருந்தால்தான் சமுதாயம்மதிக்கும் என்றளவிற்கு பிரச்சாரம்செய்தார்கள் அதன்பாதிப்பு வெற்றிலைக்கு விடைகொடுத்தது. நமதுமூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையானபற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போடக்கூடியவர்களாக இருந்தார்கள். இன்று நம்மைப்போன்று பெட்டிப்பெட்டியாக மாத்திரையை பயன் படுத்தியவர்கள் அல்ல அவர்கள். ஏன் என்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பலநோய்களுக்கு வெற்றிலைப்போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது. நல்ல ஜீரணத்தன்மையை வெற்றிலை ஏற்படுத்தியது. முதுமையில் ஏற்படக் கூடிய சுண்ணாம்புச் சத்து இழப்பை வெற்றிலை பாக்கிலுள்ள சுண்ணாம்பு ஈடுசெய்தது. எந்தசிக்கலான உணவை சாப்பிட்டாலும் அதை ஜீரணமாகும்தன்மை வெற்றிலையென்னும் காரத்தன்மையுள்ள பொருளிலும் பாக்குயென்னும் துவர்ப்பு தன்மையுள்ள பொருளிலும் சுண்ணாம்பு என்னும் எரிப்புத்தன்மை உள்ள பொருளிலும் கலந்திருந்தது என்று தமிழர்கள் வெற்றிலைப்பாக்கு போடும்பழக்கத்தை ஆங்கில மருத்துவர்களின் பேச்சைக் கேட்டு கை விட்டார்களோ அன்றே இவர்களுக்கு பல்வேறுநோய்கள் வர ஆரம்பித்தது சர்க்கரைநோய் மிக அதிகமாக பரவியதற்க்கு வெற்றிலைபோடும் பழக்கத்தை கைவிட்டதும் ஒரு காரணமாகும். இந்த வெற்றிலை போடும் நல்லபழக்கத்தை ஒழித்துக்கட்டுவதில் ஆங்கில மருத்துவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் காரணம் இந்த பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வருமானமேகிடைக்காது என்பது தான் உண்மை. தற்போதைய நிலைமை என்னத்தெரியுமா நாம் வெற்றிலை போடலாம் எனநினைத்தாலும் கூட நகர்ப்புறங்களில்கிடைப்பதில்லை, அந்த அளவிற்கு வெற்றிலையை ஒழித்துக்கட்டி விட்டனர் இப்போது மெடிக்கல்ஷாப்பில் மருந்துகள் மாத்திரைவடிவில் அமோக வியாபாரம். வெற்றிலை பயன் படுதுவதால் இரத்த அழுத்தம் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அளவு குறைக்க முடியும். முற்காலங்களில் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ இதுவும் ஒரு காரணம். குடி மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அதை விட விரும்பினால் வெற்றிலை பாக்கு பொடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவும். இதனால் தீய பழக்கங்கள் மறைந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை உணவிற்கு பின்பு வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு + கிராம்பு தேவைப்படின் ஒரு மிளகு. சேர்த்து சாப்பிலாம். வெற்றிலை காரத்தை குறைக்க முந்திரி பாதாம் பொன்ற விதைகளையும் தேன் அல்லது சிறிதளவு வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். சுண்ணாம்பு அதிகம் சேர்க்கக் கூடாது வாய்ப்புண்ணாகி விடும். சளி, கபம் போன்ற உபாதைகள் உள்ளவர்கள் பாக்கை தவிர்க்கவும். புகையிலை அறவே சேர்க்கக் கூடாது. வெற்றிலை பாக்கு பொடும் பழக்கத்தை கெட்ட பழக்கமாக மாற்றியதே புகையிலை சேர்த்ததால் தான். இது வியாதியை உண்டு பண்ணும். இந்த பழி வெற்றிலை பாக்கு பழக்கத்தின் மேல் போடப்பட்டது. #அனுபவஸ்தன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0