• முகப்பு
  • crime
  • உளுந்தூர்பேட்டை அருகே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை தொட்ட மூன்று வயது குழந்தை உயிரிழப்பு...!!!

உளுந்தூர்பேட்டை அருகே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை தொட்ட மூன்று வயது குழந்தை உயிரிழப்பு...!!!

TGI

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த ஏழமலை ராசாத்தி தம்பதியினருக்கு சர்வேஸ்வரசாமி என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது விவசாய நிலத்தில் களை எடுப்பதற்காக குழந்தையுடன் சென்ற ராசாத்தி குழந்தையை விவசாய நிலத்தின் அருகில் கீழே விட்டு விட்டு வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்டதில் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. விவசாய நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த தாய் கண் முன்னே குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் விவசாய நிலங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரி செய்வதற்காக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கிராம பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை வெறும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது தகுந்த மின்சார வாரியத்தின் தகுந்த நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும் , அப்பொழுது மட்டுமே அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended