வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் வேறு பகுதியில் தொடங்க கோரி மூன்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பொய்யான வாக்குறுதியை வழங்கி தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வரும் சிவசங்கர் mla.. அவர்களே எங்களின் குரல் இப்போது உங்களுக்கு கேட்குமா.
லப்பைக்குடிக்காட்டில் உள்ள இஸ்லாமிய நண்பர்களுக்கும் பென்னக்கோணம் மற்றும் கீழக்குடிக்காடு ஊர் பொதுமக்கள் ஆகிய கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை குடிநீர் திட்டத்தை நடைமுறை படுத்த மாட்டோம் என்று சொல்லி இப்போது சீரும் சிறப்பாக ஐந்து கிணறுகள் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.
நீர் நிலைகளில் உள்ள இப்பகுதியை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என்று கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.