• முகப்பு
  • crime
  • அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் படுகாயம் , அரசுப் பள்ளியின் அவலநிலை தொடர்கிறது...

அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் படுகாயம் , அரசுப் பள்ளியின் அவலநிலை தொடர்கிறது...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பறையில் திடீரென மேற் கூரை இடிந்து விழுந்ததில் புகேஷ், ஜனார்த்தனன், தருண்குமார் ஆகிய 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தினகரன் உள்பட தலையில் அடிபட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் இன்னும் படு மோசமான நிலையில் தான் அரசு பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது, கழிவறை கூட இல்லாத பள்ளிகள் தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிக்கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இந்த நிலை நீடித்தால் அரசு பள்ளியில் படிக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended