• முகப்பு
  • பெட்ரோல் பங்கில், சீருடையில் இருந்த விழுப்புரம் போலீஸ்காரர் மீது 3 பேர் கும்பல் தாக்குதல் நட

பெட்ரோல் பங்கில், சீருடையில் இருந்த விழுப்புரம் போலீஸ்காரர் மீது 3 பேர் கும்பல் தாக்குதல் நட

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(33). இவர் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மரக்காணம் அருகேயுள்ள கீழ்புத்துபட்டு பகுதியில் சீருடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பின்பு காவல்நிலையம் திரும்பும் போது, புதுச்சேரி பகுதியான கனகசெட்டிக்குளம் பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு சதீஸ்குமார் பெட்ரோல் நிரப்பினார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் கும்பல், பெட்ரோல் நிரப்ப சதீஸ்குமாரிடம் பணம் கேட்டது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சதீஷ்குமார் கன்னத்தில் அறை விட்டது. மேலும் அவரை கால்லால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில், சதீஷ்குமார் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதில் காவலர் சதீஸ்குமாரை தாக்கியது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த ராஜதுரை, குருநாத், கூனிமேடு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended