• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சுங்குவார்சத்திரம் அருகே பலத்த காற்றின் காரணமாக அடுத்தடுத்து மூன்று கண்டெய்னர் லாரிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து.

சுங்குவார்சத்திரம் அருகே பலத்த காற்றின் காரணமாக அடுத்தடுத்து மூன்று கண்டெய்னர் லாரிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து.

லட்சுமி காந்த்

UPDATED: May 23, 2023, 7:35:04 PM

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது.

அப்போது வீசிய பலத்தின் காற்றின் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கண்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஓட்டுனர் இல்லாததாலும், லாரியில் பொருட்கள் ஏதுமின்றி காலியாக இருந்த காரணத்தினாலும் சுழல் காற்றின் வேகத்தில் அடுத்தடுத்து மூன்று கண்டைனர் லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். 

மேலும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலையோரம் கவிழ்ந்ததால் எவருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended