அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றவர்கள் விபத்தில் பலி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்திலிருந்து வந்தவாசி கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் அதிமுக நிர்வாகிகளை சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு வேனில் அழைத்து சென்ற போது மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தில்
உயிரிழந்த அண்ணாமலை, பரசுராமன் குடும்பத்திற்கு தல 7 லட்சம் மற்றும் காயமடைந்த 5 பேருக்கு தல ஒரு லட்சம் லேசான காயமடைந்த 2 நபருக்கு தல 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் தமிழகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த அதிமுக கிளை செயலாளர்கள் அண்ணாமலை பரசுராமன் ஆகியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தலா 7 லட்சம் வழங்கினார்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகளுக்கு தல 1 லட்சமும் லேசான காயமடைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு தல 25 ஆயிரம் வழங்கினார்.
உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.