- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வீட்டில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்த இந்த அடி நீளம் உள்ள நல்ல பாம்பு.
வீட்டில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்த இந்த அடி நீளம் உள்ள நல்ல பாம்பு.
மேஷாக்
UPDATED: May 6, 2023, 8:47:31 PM
விழுப்புரம் சிறுவந்தாடு அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் பெருமாள் என்பவரது வீட்டில் 5 அடி நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியது.
அதனை பார்த்த பெருமாள் குடும்பத் தினர் பயத்தில் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட உதவி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பெருமாள் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு படம் எடுத்த ஆடிக்கொண்டிருந்த நல்ல பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட நல்ல பாம்பினை வடபகுதி யில் உள்ள காட்டில் பத்திர மாக விட்டு சென்றனர் தீயணைப்பு வீரர்களின் இந்த செயல்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி னார்.