Author: Entertainment

Category:

தமிழக பாஜக சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி திருவாரூர் ஆகிய இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட பாஜக மகளிரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கருப்பு என்கிற முருகானந்தம்,மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன்,மாவட்ட பொதுச்செயலாளர் துரை அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய மாநில துணை தலைவர் முருகானந்தம் தமிழக மக்களை ஏமாளிகளாக நினைத்து கொண்டு திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது. தமிழக மக்களை ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்த வாடிக்கையான ஒன்றாகிவிட்டது எனவும், திமுக ஆட்சி காலத்தில் தான் சென்னையில் உள்ள குளங்கள், ஏரிகள் போன்றவை ஆக்கிரமிக்கப்பட்டன எனவும்,நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விட்டார் எனவும், தமிழக அரசு பெட்ரோல்,டீசலுக்கான மாநில வரியை விலையை  குறைக்க வில்லை எனவும் பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார்,நகர தலைவர் சங்கர் நன்றி உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் செந்தில் அரசன் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அரவிந்த்,நகரச் செயலாளர் வசந்தராஜன்,மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ரவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:

Comments & Conversations - 0