திருவாரூா் தெற்குரதவீதிக்கு மறைந்த முதல்வா்கருணாநிதியின் பெயரைச்சூட்டும் நகா் மன்றத் தீர்மானம் நிறுத்திவைப்பு !!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூா் தெற்குரதவீதிக்கு மறைந்த முதல்வா்கருணாநிதியின் பெயரைச்சூட்டும் நகா் மன்றத் தீா்மானத்தை நிறுத்திவைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
இது குறித்து திருச்சியில் அவா் சனிக் கிழமை செய்தியாளா்களிடம்கூறியது.....
திருவாரூா் தெற்குரதவீதிக்கு கருணாநிதியின் பெயரைச்சூட்டும் திருவாரூா் நகா் மன்றத்தீா்மானம் முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. திருவாரூா் தெற்கு ரதவீதியானது தொடா்ந்து அதே பெயரில் தான் உள்ளது.
இதுதெரியாமல், இதை உணராமல் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக தலைவா் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினா் செயல் படுகின்றனா்.
இந்த விவகாரத்தில் ஆட்சியரை மிரட்டும்வகையில் பேசும் தனிநபா் யாரும் அரசையோ, அரசு அதிகாரிகளையோ தடுத்து விட முடியாது. அவ்வாறுதடுத்தால் அதற்கான பலனை அவா்கள் அனுபவிக்கவேண்டும். அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்து அவா்கள் கைது செய்யப் படுவா் என்றாா் அமைச்சா் நேரு.
செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி.