• முகப்பு
  • அரசியல்
  • இராசிபுரம் அருகே செயல்படும் திருவள்ளுவர் அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை.

இராசிபுரம் அருகே செயல்படும் திருவள்ளுவர் அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை.

முத்தையா

UPDATED: Apr 29, 2023, 8:54:34 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர்கேட் பகுதியில் செயல்படும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி என்பவர் முதலாம் ஆண்டு மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 27ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் எஸ்எப்ஐ., (SFI) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பேராசிரியர் சுந்தரமூர்த்தி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended