- முகப்பு
- விளையாட்டு
- கராத்தே மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவிலான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
கராத்தே மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவிலான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
சுரேஷ்பாபு
UPDATED: May 22, 2023, 8:13:57 PM
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொப்பூர் கிராமத்தில் சிக்கோவாசி கராத்தே டோ அசோசியேஷன் ப்ரெசென்ட் சம்பத்குமார் தலைமையில் மாஸ்டர் விநாயகமூர்த்தி மற்றும் வெங்கடேசன் அவர்களின் மாணவன் மாஸ்டர் கராத்தே கொப்பூர் கோகுல் அவர்களால் கராத்தே மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவிலான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரபல நடிகரும் பின்னணி பாடகர் ஷாம் விழாவில் கலந்து கொண்டு கராத்தே மாணவர்களை பாராட்டி தொடர்ந்து கராத்தே கற்றுக் கொள்ளும் மாணவர்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக கூடாது என்றும்,
கராத்தே கற்றுக் கொண்டு நம்முடைய நாட்டுக்கு நல்ல குடிமகன்களாக நீங்கள் வரவேண்டும் என்றும் நம்முடைய பாதுகாப்புக்கு முக்கியமானது கராத்தே என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார் அவருடன் தொழிலதிபர் சரண் பங்கேற்று கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அவருடன் ஒன்றிய கவுன்சிலர் கொப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் R.உதய ராணி ருக்மாங்கதன் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்...