அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் நியமனம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர், ஜுன் 07- அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளராக வி.இளங்கோவன் அவர்களை, அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவனரும் மற்றும் அகில இந்திய தலைவருமான சி.எஸ்.அருள்முருகன் நியமனம் செய்துள்ளார்.
நியமனச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை கடலூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் வழங்கினார். உடன் மாநில ஆன்மீக அணி செயலாளர் கொல்லிமலை சித்தர் தஷிணாமூர்த்தி சுவாமிகள் உள்ளார்.
இவருக்கு அனைத்து பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி