- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈக்காடு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஏழு அடி சாரை பாம்பு உள்ளே புகுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈக்காடு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஏழு அடி சாரை பாம்பு உள்ளே புகுந்தது.
சுரேஷ் பாபு
UPDATED: May 19, 2023, 8:26:47 PM
ஈக்காடு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் உதவி தோட்டக்கலை அலுவலர் மலர்மன்னன் பணியில் இருக்கும் பொழுது தோட்டக்கலை பண்ணையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஏழு அடி சாரை பாம்பு உள்ளே புகுந்தது உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஹரி கிருஷ்ணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து வந்து ஏழு அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.