• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் பாண்டி அரசமரத்தடி விநாயகர் ஆலய சபரி மகா கும்பாபிஷேகம்.

திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் பாண்டி அரசமரத்தடி விநாயகர் ஆலய சபரி மகா கும்பாபிஷேகம்.

து.இளவரசன்

UPDATED: May 18, 2023, 9:00:18 AM

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ராயல் அடி அருகே அமைந்து உள்ள வேண்டிய வரங்களை வாரி தரும் அருள்மிகு அரச மரத்தடி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.

மூன்று கால யாகசாலை பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது இந்த நிகழ்வில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டி பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வர வேண்டியும்,

சிறப்பு யாகங்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வளர்க்கப்பட்டு யாகசாலை பூஜையில் இருந்து கடன் புறப்பட்டு ஆலயம் வளம் வந்து ஆலயத்தின் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீரானது ஆலய கோபுரத்தில் மேல் வைக்கப்பட்டிருந்த கலசத்தில் 91 வகையான புனித நீர் கலந்து ஊற்றப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்தனர் இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் அப்பகுதி பக்தர்கள் மற்றும் 83 குல மாணிக்கம் தங்கவேல் ராதா ருக்மணி குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பிலும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended