ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியுடன் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
மாமுஜெயக்குமார்
UPDATED: May 12, 2023, 6:37:43 AM
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியுடன், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை ,அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, கே.எஸ். ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரி தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் செயல் பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுரி முதல்வர், செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவ்வொப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், “இரு கல்வி நிறுவனங்களின் ஒரு மித்த விருப்பத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கற்றல் கற்பித்தல், ஆராய்ச்சித் திட்டங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன.
கூட்டு ஆராய்ச்சி, தொழில் நுட்ப உதவிகள், கல்வி உபகரணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன. கருத்தரங்குகள், பயிலரங்குகள், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.”
ஒப்பந்தத்தின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார், துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா, அகமதிப்பீட்டுக் குழு, தேசிய தர நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் என்.உமா, முனைவர் ஐ.பர்வீன் பானு, முனைவர் வி.கிருஷ்ணபிரியா, கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் எம்.பிரசாத், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.