மாற்றுத்திறனாளிகளுக்கு தேனி மாவட்டம் அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் கலந்து கொண்டு உதவிதொகை அரசு சான்றிதழை வழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கோப்புகளை ஆய்வு செய்து இ சேவை மையங்களில் மக்களுக்கு வழங்கி வரும் பயன்பாடுகளை உரிய முறையில் கிடைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்வில்வருவாய்
கோட்டாட்சியர் சிந்து
வட்டாட்சியர்ராணி, சமூகநல திட்ட
வட்டாட்சியர் இளங்கோவன், வருவாய்
ஆய்வாளர்கள் செல்வி,கனகமணி,
கிராம நிர்வாக அலுவலர்கள்
தங்கமுத்து,குமார்,சோனைமுத்து.
அகிலன், கற்பகம் மற்றும்மாற்றுத்
திறனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா