• முகப்பு
  • aanmegam
  • வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.

வந்தவாசி அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு அட் மி வசந்தத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 30 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இது தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 3000த்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மன் தரிசனம் செய்து சென்றனர். தி மலை செய்தியாளர் அகிலன் சுப்ரமணியன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended