- முகப்பு
- pondichery
- அரசு அதிகாரி வீட்டில் திருட்டு; சிசிடிவி காட்சி வெளியகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு அதிகாரி வீட்டில் திருட்டு; சிசிடிவி காட்சி வெளியகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகி. அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு வராண்டாக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த குடிநீர் குழாய் மீட்டர்களை திருடினான்.
இது வீட்டில் இருந்த, சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இதை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் தெரிவித்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிநீர் குழாய் மீட்டரை திருடியது, பெரியார் நகரை சேர்ந்த பழனிவேலு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார், திருடபட்ட 5 மீட்டரை பறிமுதல் செய்தனர்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.