ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் 8 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முடிவடைந்தது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சி சாத்தா வட்டம் கிராமத்தில் மேற்குத் தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன .
ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் பொதுமக்கள் ஒரு வாரகாலம் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு முயற்சிகள் செய்து சுமார் 8 லட்சம் செலவில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.