சசிகலா சொன்ன அந்த வார்த்தை, அ.தி.மு.கவின் கூடாரத்தையே வெலவெலக்க வைத்து வருகிறது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இதற்கு என்ன காரணம்?
கட்சியை கைப் பற்றும் முயற்சியில் சசிகலா தொடர்ந்து இறங்கிவருகிறார்.
மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப் படுத்தும் முயற்சியும் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியசசிகலா, அ.தி.மு.க எதிர்க்கட்சியாக சரியாகசெயல்படவில்லை, ஜெயலலிதா போன்ற தலைமை அ.தி.மு.கவில் இல்லை.
அ.தி.மு.கவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது.
அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
யார் என்பதை வெளியில்சொல்ல முடியாது.. என்னைகட்சியில் இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்?
எனதுதலைமையில் அ.தி.மு.க செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அ.தி.மு.கவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது.
அ.தி.மு.கவில் எல்லோரும் என்னை எதிர்த்துபேசவில்லை. பதவிக்காக அ.தி.மு.கவில் ஒரு சிலர் எனக்கெதிராக பேசுகின்றனர் என்றார்.
சசிகலா இப்படி பேசியது தான், எடப்பாடி தரப்புக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்கிவருகிறதாம்.
சசிகலாவை பொறுத் தவரை இனிமேல் அ.தி.மு.க உட் கட்சி பிரச்சனைகளை பெயரளவில் பேசிவிட்டு,
தி.மு.கவிற்கு எதிராக அனல்கக்கும் பேட்டிகள் மூலம் தாம் ஒரு வலுவானதலைவராக உருவாகி விடலாம் என கருதுகிறார்.
இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
செய்தியாளர் பா. கணேசன்