• முகப்பு
  • district
  • திருலோகி ஊராட்சி சிவபுரணி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக முடிந்தது.

திருலோகி ஊராட்சி சிவபுரணி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக முடிந்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட சிவபுரணி 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று காலை 8 மணி முதல் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ,சுயேட்சையாக கஸ்தூரி முருகன் ரோஜா குமார் இருவரும் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 337 வாக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 248 வாக்குகள் பதிவாகின. அதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் கஸ்தூரி முருகன் 132 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட ரோஜாகுமார் 114 வாக்குகள் பெற்று தோல்வி. இதில் மூன்று வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். மேலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended