• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி திருவாரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கினர்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி திருவாரூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கினர்.

து.இளவரசன் 

UPDATED: May 28, 2023, 9:14:40 AM

லக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களுக்கு மதிய உணவு சேவை திட்டத்தின் அடிப்படையில் உணவு வழங்க வேண்டும் என்று மாநில தலைமை சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மதிய உணவு சேவை திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் மதன் விஜய் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

மதிய உணவு வழங்கத் தொடங்கியவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் முண்டியடித்துக் கொண்டு வந்து மதிய உணவை வாங்கி சென்றனர்.

மேலும் 200 நபர்களுக்கு இந்த மதிய உணவு தண்ணீர் பாட்டில் உடன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கலையரசன் நகர தலைவர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended