கிள்ளை இரயில்வே பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக நெடுஞ்சாலையில் பாலம் பழுதாகி ரோட்டில் பள்ளத்தாக்கு ஏற்பட்டது
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிதம்பரம் அருகே : கிள்ளை இரயில்வே பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக நெடுஞ்சாலையில் பாலம் பழுதாகி ரோட்டில் பள்ளத்தாக்கு ஏற்பட்டது .
இந்த நெடுஞ்சாலையில் உலக புகழ் பெற்ற பிச்சாவரம் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியிலேயே இதுபோன்ற ஆபத்தான நிலை உள்ளது.
இந்த வழியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அன்றாடம் போக்குவரத்துக்கு உபயோகிக்கின்றனர் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையாகவும் மருத்துவமனைக்கு செல்லும் பாதையாகும் அன்றாட அத்தியாவசிய பொருள் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பாதையாகவும் இருக்கின்றது.
மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் துரிதமாக செயல்பட்டு இச்சாலையில் உள்ள பழுதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரிய மூர்த்தி.