• முகப்பு
  • அரசியல்
  • பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம்.

பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப மாபெரும் பொதுக்கூட்டம்.

ர.தீனதயாளன்

UPDATED: May 7, 2023, 6:24:23 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார் .

மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது 10 வருடம் திமுக ஆட்சியில் இல்லாத பொழுது எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்தார்கள் எனவும் மேலும் அணிகள் இணைப்பு அணிகள், இணைப்பு என்று அதிக நேரம் செலவிட்டார்கள் தவிர மக்களைப் பற்றி கடுகு அளவு கூட கவலைப்படவில்லை எனவும் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரத்தை இழந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கான இயக்கம் என்றும் 

யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழருக்கு ஒரு துன்பம் துயரம் இன்னல் இடையூறு என்று சொன்னால் வீதியில் இறங்கி குரல் கொடுக்கக் கூடிய ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் மேலும் திமுக ஆட்சியில் தான் பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுக்கின்றோம் என அவர் பேசினார்.

மேலும் இந்த மாபெரும் சாதனைப் பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended