• முகப்பு
  • tamilnadu
  • பாம்புகடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம்பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பாம்புகடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம்பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் அருகே பாம்புகடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம்பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இரவுதூங்கிக் கொண்டிருக்கும்போதுபோர்வையில் புகுந்தபாம்பு கடித்ததுதெரியாமல் உறங்கியநிலையில், காலையில் அவர்உயிரிழந்த சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்மாவட்டம், பனையூர்பகுதியில் நாராயணன் என்பவர்தனது வீட்டில்நேற்றிரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது,போர்வையில் பாம்புஊர்வதை நாராயணன்கண்டுள்ளார். இதனை அடுத்து பாம்பைஅடித்து வீட்டின் வெளியேபோட்டுள்ளனர். ஆனால், பாம்பைஅடித்துக் கொள்வதற்குமுன்பே, நாராயணனின் மகள்சிறுமி தீபாவைபாம்பு கடித்துள்ளது. இது தெரியாமலேயேமீண்டும் உறங்கசென்றுள்ளனர். மறுநாள்காலை எழுந்து பார்த்த போது சிறுமிதீபா உயிர் இறந்துகிடப்பதை கண்டு நாராயணன் பெரும்அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்தசம்பவம் குறித்துதகவல் அறிந்துவந்த போலீசார், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். செய்தியாளர்: க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended