• முகப்பு
  • குற்றம்
  • காட்பாடி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 2.5 லட்சம் பணம் பறிப்பு!

காட்பாடி அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 2.5 லட்சம் பணம் பறிப்பு!

வாசுதேவன்

UPDATED: May 9, 2023, 8:06:53 PM

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள திருவலம் மின் நிலையம் கூட்டுச்சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் அசோக் குமார் என்பவரை தாக்கி ரூ.2.5 லட்சம் பணம், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடையில் இருந்து காட்பாடி நோக்கி வந்த போது சேர்க்காடு பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ,செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருவலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து சேர்க்காடு பகுதியில் போலீசார் விசாரணையை முழுவீச்சில் துருவி துருவி மேற்கொண்டு வருகின்றனர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended