தமிழகத்தில் நடைபெறும் கள்ளச்சாராயம் மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.
ஆர்.ஜெயச்சந்திரன்
UPDATED: May 20, 2023, 7:26:09 PM
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரும் பேசும் பொருளாக ஆன நிலையில் இதனை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளச்சாராயத்திற்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,
தஞ்சை ரயில் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும்,
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்பு.