• முகப்பு
  • district
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் ஆகஸ்ட் மாதம் சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்லவும் முடிவு செய்து இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் மாநில துணைத்தலைவர் அம்சராஜ் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் பாக்யராஜ் சாந்தா ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended