• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மூன்றாம் கட்ட அறை கூவல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மூன்றாம் கட்ட அறை கூவல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்மேகம்

UPDATED: Mar 31, 2023, 6:19:00 AM

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மூன்றாம் கட்ட அறைகூவல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவி உமாராணி தலைமை வகித்தார்.

அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி உமாராணி தெரிவிக்கையில் அங்கன்வாடி சங்க கோரிக்கைகளான ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்கிற பெயரில் அங்கன்வாடி மையங்களை இனைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

குழந்தைகளின் வருகையினை கணக்கில் கொண்டு பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையங்களாக மாற்றுவதையும் அம்மினி மையங்களை பிரதான மையங்களோடு இனைப்பதையும் கைவிட வேண்டும்

10 ஆண்டுகள் அங்கன்வாடியில் உதவியாளராக பணி புரிந்தவர்களுக்கு எந்த வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் மேலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் எதிர் வரும் ஏப்ரல் 25.ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் உமாராணி அறை கூவல் விடுத்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended