வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாணவி விஷப்பாம்புக்கடித்து உயிரிழந்தார்.

L.குமார்

UPDATED: May 16, 2023, 10:47:19 AM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உப்பளம் கிராமத்தில் வசிப்பவர் பிரதாப், கூலித் தொழிலாளியான இவரது மகள் அக்ஷயா பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மேற்படிப்புக்காக கல்லூரி செல்வதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அக்ஷயாவை வீட்டினில் நுழைந்த கடுமையான விஷமுள்ள பாம்பு ஒன்று காலில் கடித்து உள்ளது.

இதனால் துடித்து எழுந்த அக்ஷயா பாம்பை கண்டு அலற அருகில் இருந்தவர்கள் அக்ஷயாவை அழைத்துக் கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது அக்ஷயா பரிதாபமாக சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். இது குறித்து பொன்னேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மரணம் அடைந்த அக்ஷயாவை பிரேத பரிசோதனைக்காக சவ அறைக்கு கொண்டு சென்ற போது அங்கு குளிர்சாதன பெட்டி இல்லாததால் உறவினர்கள் கோபமடைந்தனர்.

இதனால் மருத்துவ அலுவலர்களுடன் மருத்துவமனையில் இருந்த குளிர்சாதன சவ பெட்டி என்ன ஆச்சு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது இரண்டு குளிர்சாதன பெட்டிகளும் பழுதடைந்து விட்டதாகவும் தனியாரிடம் இருந்து உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது இறுதியில் தனியார் குளிர்சாதன பெட்டி வரவழைக்கப்பட்டு பிரேதம் சவ அறையில் வைக்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended