தொடரும் சிறை கைதியின் போராட்டம்
யாழ்ப்பாணம் - டி.பிரதீபன்
UPDATED: May 29, 2023, 8:46:08 AM
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் இரவிரவாக தொடர்ந்து இன்றும் தொடர்ந்து வருகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மாத்தறையைச் சேர்ந்த 41 வயதானபுஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.