• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருக்குவளை அருகே தொழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா.

திருக்குவளை அருகே தொழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா.

செ.சீனிவாசன்

UPDATED: May 11, 2023, 7:36:55 PM

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள தொழுதூர் கிராமத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ நல்ல மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவானது பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து மூன்று நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான காவடி ஊர்வலம் நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட விரதமிருந்த பக்தர்கள் செடில் காவடி, அலகு காவடி, மயில் காவடி, தேர் காவடி எடுத்தல்,பால்குடம் உள்ளிட்டன எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் காவடி ஊர்வலத்தில் இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடுவதை கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended