- முகப்பு
- pondichery
- 10-ஆம் வகுப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் மத்திய அரசின் குறுகிய கால வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் .
10-ஆம் வகுப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் மத்திய அரசின் குறுகிய கால வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி நகர்புற வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி துறை இயக்குனர் ரவிதீப் சிங் சாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்..
புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை புதுச்சேரி நகராட்சி உழவர்கரை நகராட்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வருகின்ற 10-ம் தேதி முதல் இலவச சிஎன்சி மெஷின் ஆபரேட்டர் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் இதனை 35-வயதுக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தள்ளார்.
குறு சிறு நடுத்தர வர்த்தக மையம் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் சிவப்பு நிறமுள்ள உணவுப் பங்கீட்டு அட்டை அல்லது மூன்று லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இதில் இரண்டு மாத காலம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்றும் உதவித்தொகையுடன் கூடிய நிலை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்தாக தெரிவித்தனர்.
பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இவர்கள் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் ஆதலால் பயிற்சிக்கு தகுதியானவர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.