கோட்ட கச்சேரி தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் கோட்ட கச்சேரி தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு என்பது இதுநாள் வரை செயல்படாமல் இருந்தது.
பெற்றோர்கள் அனைவரையும் அழைத்து 20 நபர்கள் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.
வீரா தென்னரசு மேற்பார்வை,
ரேவதி தலைமை ஆசிரியை, கன்வீனர்
ஜோதி ஆசிரியை ,உறுப்பினர்,
வார்டு உறுப்பினர் ,மகளிர் சுய உதவி குழு , மற்றும் 12 நபர்கள், மொத்தம் 20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எஸ்.எம்.சி பள்ளி மேலாண்மை குழு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மட்டுமே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது இருபது நபர்கள் கொண்ட எஸ்.எம்.சி.பள்ளி மேலாண்மை குழு தான் தீர்மானிக்க வேண்டும்.
பள்ளியின் வரவு-செலவு , சீரமைப்பு பணி மற்றும் அத்தியாவசிய பணிகள், பூங்கா அமைப்பு போன்ற பணிகள் நடைபெற, 20 நபர்கள் ஒப்புதலின் பேரில் தான் செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும் மாணவர்களை டாட்டா ஏசி மூலம் இலவசமாக பள்ளிக்கு அழைத்து வரும் தெற்கு படுகை நாலாவது வார்டு உறுப்பினர் வீரமணி என்பவரையும் பாராட்டினர்.
மன்னார்குடி செய்தியாளர் எஸ்.வீரமணி.
இன்றைய செய்திகள் மன்னார்குடி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kumbakonam flash news,kumbakonam todays news tamil,kumbakonam latest news,mannargudi flash news,mannargudi latest mews tamil,mannargudi news todays tamil,school management committee was set up at the Fort Concert Elementary School