- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம்
கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம்
மேஷாக்
UPDATED: May 11, 2023, 4:40:41 PM
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொடிமா கிராமத்தை சேர்ந்த முத்தாள், சங்கர் ஆகியோரின் கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் அரிசி, மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பிளாஸ்டிக் குடம், பக்கெட் பாய், தலையணை, வேட்டி, சேலை பெட்ஷீட், காய்கறிகள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் ரூ. 3 ஆயிரம் பணம் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.