ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் 14 31ஆம் பசலி நடைபெற்றது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 14 31ஆம் பசலி ஜே ஜெயக்குமார் தனி துணை ஆட்சியர் மற்றும் முத்திரைத்தாள் ஆணையர் துணை வட்டாட்சியர் சசிகுமார் , தனலட்சுமி , சுமதி வட்டார ஆய்வாளர் ஜெயலட்சுமி சீதாராமன் இவர்களிடம் பட்டா மாற்றம் ஓ ஏபி ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் திருத்தம் ஆகிய திருத்தங்களுக்கு பொதுமக்களால் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி மேடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பேரூராட்சிக்கு கட்டுப்பாட்டில் அதோடு அரசு பள்ளியை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து தரவும் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் சுடுகாடு மேடு என குறிப்பிடப்பட்டுள்ளது .
இதனையும் பேரூராட்சி கட்டுப்பாட்டிற்கு வரவும் அதோடு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பல ஆண்டு காலமாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா பூர்வீகம் பத்திரபதிவு செய்யப்படவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
உடன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி , பாரதிதாசன் , ராஜசேகர் மற்றும் 15 வார்டு உறுப்பினர் திமுக பிரமுகர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.