• முகப்பு
  • india
  • அரசு பணிக்கு கமிஷன்கேட்ட பஞ்சாப் அமைச்சர் உடனே கைது.

அரசு பணிக்கு கமிஷன்கேட்ட பஞ்சாப் அமைச்சர் உடனே கைது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை அரசுபணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம்கமிஷன் வழங்கவேண்டும் எனகேட்ட பஞ்சாப்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா பதவிநீக்கம் செய்யப் பட்டார். தொடர்ந்து அவரை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைதுசெய்தனர். அரசுபணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வேண்டுமென அமைச்சர் விஜய்சிங்லா கேட்டுள்ளார். இது தொடர்பாக புகார்வந்ததால், விசாரணை நடத்தப் பட்டது. அதில், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், விஜய்சிங்லா பதவிநீக்கம் செய்யப் பட்டார். இந்தியவரலாற்றில் இரண்டாவது முறையாக, ஊழல்புகாருக்கு உள்ளான தனது அமைச்சர்மீது முதல்வர் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதற்குமுன் கடந்த 2015 ல் ஊழல்புகார் காரணமாக அமைச்சரை பதவிநீக்கம் செய்து கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார். அமைச்சர் பதவி நீக்கம் செய்யப் பட்டதை தொடர்ந்து விஜய்சிங்லா மீது வழக்குப் பதிவு செய்தமாநில லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைதுசெய்தனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended