ஸ்பிக் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு.

மாரிமுத்து

UPDATED: Mar 31, 2023, 9:42:42 AM

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்பிக் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலையில் இருந்து யூரியா உள்ளிட்ட உர வகைகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவில் பிள்ளை நகர் பகுதி மக்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில் கடந்த இரண்டு நாட்களாக எங்கள் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மூச்சு விடுவதற்கும் மூச்சு திணறல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

ஸ்பிக் தொழிற்சாலையில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக வெளியேறும் புகையினால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகையால் ஸ்பிக் நிறுவனம் மீது உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு மரணம் அடையும் சூழ்நிலை உருவாகிவிடும்,

உடனடியாக அப்பகுதியில் உள்ளஸ்பிக் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைனய கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended