இரு நபர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனையாக வளர்ந்து நிற்கிறது ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் பூதா அருள்மொழி ஒரு தரப்பினருக்கு சாதமாக செயல்பட்ட போலீசாரை கண்டித்து கூட்டம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூர் கிராமத்தில் நேற்று நடந்த இரு தரப்பினர் மோதலில், போலீசார் மாற்று சமுதாயத்தினருக்கு சாதகமாக செயல்படுவதால் , வன்னியர் சங்க மாநில தலைவர் பூதா அருண்மொழி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து நேரில் ஆறுதல் கூறினார்.
மற்றும் போலீசாரை கண்டித்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக போலீசார் பல்வேறு வகையில் வழக்கு பதிவு செய்து வருவதாகும், இதனால் எங்களது தரப்பினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்தார் .
அவன் அடித்தால் நீயும் அடி, அவன் என்ன செய்கிறானோ அதை விட மூன்று மடங்கு நீயும் செய் , போலீசாரே எங்கள் பிடியை சற்று தளர்த்தி விடுங்கள் ஒன்றில் இரண்டு பார்த்து விடுகிறோம் , என்று மிகுந்த ஆவேசத்துடன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடலூர் மாவட்ட செயலாளர் செல்வம், மகேஷ் நகர செயலாளர் , இளையராஜா ஒன்றிய செயலாளர் , அருளாளன் கிளை செயலாளர் , சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரு நபர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனையாக வளர்ந்து நிற்கிறது , இச்சூழ்நிலையில் இரு தரப்பின் தலைவர்களும் , காவல்துறையும் மென்மையாக கையாண்டு பதற்றமான சூழ்நிலையை தணிக்க வேண்டும் .
ஜாதி கலவரம் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.